கோவையில் ஓட்டுச்போடச் சென்ற ரயில்வே ஊழியர் வீட்டில் கைவரிசை!

published 9 months ago

கோவையில் ஓட்டுச்போடச் சென்ற ரயில்வே ஊழியர் வீட்டில் கைவரிசை!

கோவை: திருச்சி ரோடு ரயில்வே காலனியை சேர்ந்தவர் நாகராஜ் (35). ரயில்வே ஊழியர்.

இவர் கடந்த 18ம் தேதி ஓட்டு போடுவதற்காக தனது சொந்த ஊரான தேனிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து நேற்று கோவை திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது.

உள்ளே சென்று பார்த்த போது அலமாரியில் வைத்திருந்த 6 பவுன் தங்க நகைகளை காணவில்லை. வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர் திருடி சென்று விட்டார்.

இது குறித்து நாகராஜ் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe