கோவையில் தடுப்பணையில் குளிக்கச்சென்ற சிறுவர்கள் பரிதாப பலி!

published 9 months ago

கோவையில் தடுப்பணையில் குளிக்கச்சென்ற சிறுவர்கள் பரிதாப பலி!

கோவை: கோவை, தீத்திபாளையம் அரசு பள்ளி மாணவர்கள் பெருமாள் கோவில் பதியில் உள்ள முண்டந்துறை தடுப்பணியில் குளிக்கச் சென்ற போது நீச்சல் தெரியாமல் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை, காருண்யா நகர் காவல் நிலைய சரகம் பெருமாள் கோவில்பதி  கிராமம் முண்டாந்துறை ஆறு தடுப்பணையில் குளிப்பதற்காக தீத்திபாளையம் அரசு மேல் நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவர்கள்  1)பிரவீன்  2) கவின்  3) தக்க்ஷன்  மற்றும் சஞ்சய்  ஆகிய 4 பேரும் சென்று குளித்து உள்ளனர். 

40 அடி ஆழம் உள்ள தடுப்பணையில் தற்போது 15 அடி நீர் உள்ளது.
இதில் நீச்சல் தெரியாமல் பிரவீன், கவின், தக்ஷன் ஆகிய 3 பேரும் நீரில் மூழ்கி இறந்து உள்ளனர்.  இது குறித்து காருண்யா நகர் காவல் துறை மற்றும் தீயணைப்பு, மீட்பு துறையினருக்கு  தகவல் தெரிவிக்கப்பட்டது.  சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் 3 பேரின் உடல்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக கோவை அரசு மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.  

இதுகுறித்து காருண்யா நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe