மில் அதிபர் வீட்டில் ரூ.30 லட்சம் தங்கம், வைரம் திருட்டு- பணிப்பெண் மீது புகார்...

published 9 months ago

மில் அதிபர் வீட்டில் ரூ.30 லட்சம் தங்கம், வைரம் திருட்டு- பணிப்பெண் மீது புகார்...

கோவை: கோவை மில் அதிபர் வீட்டில் ரூ.30 லட்சம் மதிப்பிலான தங்கம், வைரம் திருடியதாக பெண் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியை சேர்ந்தவர் வெங்கடபதி (74), மில் அதிபர். இவரது வீட்டில் ரத்தினபுரியை சேர்ந்த விஜயலட்சுமி(36) என்பவர் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், வீட்டில் ஆட்கள் இல்லாதபோது விஜயலட்சுமி வீட்டு பீரோவை திறந்து சிறிது, சிறிதாக தங்கம் மற்றும் வைர நகைகளை திருடியதாக கூறப்படுகிறது. 

இது குறித்து வெங்கடபதி ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் விசாரித்தனர். விசாரணையில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் விஜயலட்சுமி வெங்கடபதி வீட்டில் வேலை பார்த்து வந்ததும், சுமார் ரூ.30 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளை திருடியதும் தெரியவந்ததாக தெரிகிறது. 

இதனையடுத்து போலீசார் விஜயலட்சுமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe