கோவையில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்- 3 பேர் கைது…

published 8 months ago

கோவையில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்- 3 பேர் கைது…

கோவை: கோவையில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர்.
கோவை காந்திபுரம் மத்திய பஸ்நிலையம் அருகே உள்ள லாட்ஜ் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

அதன்பேரில், காட்டூர் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அங்கு நின்றிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். சோதனை செய்தபோது அவர் 7 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. 

இதனையடுத்து போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கேரளா மலப்புரத்தை சேர்ந்த முகமத் ரிஸ்வான்(26) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 7 கிலோ கஞ்சா, 2 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 

பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவரை ஏற்கனவே கஞ்சா விற்ற வழக்கில் தாம்பரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் கைது செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ. 1.50 லட்சம் ஆகும். இவரது பின்னணியில் உள்ளவர்கள் குறித்தும் போலீசார் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

இதேபோல், கோவை துடியலூர் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அப்பநாயக்கன்பாளையம் பகுதியில் சந்தேகம்படும்படி நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் கஞ்சா விற்றது தெரிந்தது. 

இதனையடுத்து போலீசார் கஞ்சா விற்ற ராமநாதபுரத்தை சேர்ந்த தாரிக் இம்ரான்கான்(24) மற்றும் ஒண்டிப்புதூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்த சஞ்சய்(23) ஆகிய இருவரை கைது செய்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe