குறைந்த வட்டியில் கடன் தருவதாக யாரேனும் பணம் கேட்டால் கொடுக்காதீங்க!

published 8 months ago

குறைந்த வட்டியில் கடன் தருவதாக யாரேனும் பணம் கேட்டால் கொடுக்காதீங்க!

கோவை: கோவை கோவில்பாளையத்தில் தனியார் நிறுவனம் உள்ளது. இங்கே ரவிக்குமார் என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

கடந்த மே மாதம் 17ம் தேதி இவருடைய செல்போனிற்கு அழைப்பு வந்தது. அதில் பேசிய நரேஷ், யுவராஜ் ஆகியோர் தாங்கள் கணபதியில் உள்ள ஒரு நிதி நிறுவன அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறியுள்ளனர்.

அப்போது அவர்கள் குறைந்த வட்டியில் கடன் தருவதாக கூறினர். இதை உண்மை என நம்பிய ரவிக்குமார் தனக்கு ரூ.20 லட்சம் கடன் தேவைப்படுகிறது என்று கேட்டுள்ளார்.

அதற்கு அவர்கள் கடன் தொகை பெற வேண்டும் என்றால் ரூ.1 லட்சத்துக்கு ரூ.20 ஆயிரம் வீதம் ஆணவங்கள் தயார் செய்ய கட்டணமாக கொடுக்க வேண்டும் என்றும், மொத்தம் ரூ.2 லட்சம் ஆகும் என்றும் கூறி உள்ளனர்.

2 லட்ச ரூபாய் வழங்குவதாக ரவிக்குமார் கூறினார். இந்த பணத்தை வாங்க கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு நரேஷ், யுவராஜ் வந்தனர். அப்போது அவர்களிடம் 2 லட்ச ரூபாயை ரவிக்குமார் வழங்கினார்.

பணத்தை பெற்றுக்கொண்ட அவர்கள் கடன் தொகை வாங்கித்தருவதாக கூறி சென்றனர். ஆனால் அதன் பிறகு அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை.

அவர்கள் கூறியதுபோன்று குறைந்த வட்டியில் ரூ.20 லட்சம் கடனும் கொடுக்கவில்லை. அதிர்ச்சியடைந்த ரவிக்குமார் இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் வேலூர் ஆற்காடு வாத்தியார் கோவிந்தராஜ் வீதியை சேர்ந்த நரேஷ் (31), திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தேவாங்கபுரத்தை சேர்ந்த யுவராஜ் (36) என தெரியவந்தது.

இதையடுத்து காந்திபுரத்தில் பதுங்கி இருந்த அவர்களை ரேஸ்கோர்ஸ் போலீசார் கைது செய்தனர்.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe