போதையில் தூங்கியவரிடம் செல்போன், நகை திருட்டு- போலீசார் விசாரணை…

published 7 months ago

போதையில் தூங்கியவரிடம் செல்போன், நகை திருட்டு- போலீசார் விசாரணை…

கோவை: போதையில் தூங்கியவரிடம் செல்போன், நகை திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை செல்வபுரம் தெலுங்குபாளையம் ஜோசியர் தெருவை சேர்ந்தவர் நந்தகுமார் (52). இவர் செட்டிபாளையம் ரோட்டில் உள்ள மிளகாய் தூள் கடையில் வேலை பார்த்து வருகிறார். 

நேற்று முன்தினம் தெலுங்குபாளையத்தில் நடைபெற்ற கோயில் திருவிழாவுக்கு சென்றார். பின்னர் உக்கடம் பகுதியில், உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்தினார். போதை மிகுதியில் உக்கடம் என்.எச்.ரோட்டில் உள்ள கடை முன்பு படுத்து தூங்கினார். அப்போது அங்கு வந்த மர்மநபர் நைசாக நந்தகுமாரிடம் இருந்த செல்போன், ரூ.3 ஆயிரம் மற்றும் 2 கிராம் தங்க மோதிரத்தை திருடி சென்றார். 

போதை தெளிந்து எழுந்து பார்த்த போது, செல்போன், நகை, பணம் திருடு போனதை கண்டு நந்தகுமார் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து உக்கடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe