சிங்காநல்லூரில் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

published 7 months ago

சிங்காநல்லூரில் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

கோவை: கோவை சிங்காநல்லூரில் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை சிங்காநல்லூர் இருகூர் காந்திசிலை எதிரே தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் எந்திரம் உள்ளது. இதனை பராமரிக்கும் பணியை திருச்சி ரோட்டில் உள்ள தனியார் ஏஜென்சி கவனித்து வருகிறது. 

இந்நிலையில், ஏ.டி.எம் எந்திரத்தை பார்வையிட ஏஜென்சி நிறுவன ஊழியர்கள் நேற்று சென்றனர். அப்போது ஏ.டி.எம் எந்திரத்தின் முன்பக்கம் பாதி உடைக்கப்பட்டிருந்தது. 

ஆனால் பணம் எதுவும் கொள்ளை போகவில்லை. நள்ளிரவில் உள்ளே நுழைந்த மர்ம நபர் ஏ.டி.எம் எந்திரத்தை உடைக்க முடியாததால், கொள்ளை முயற்சியை கைவிட்டுச் சென்றுள்ளார். 

இதனால் அதிர்ச்சியடைந்த ஏஜென்சி ஊழியர்கள் இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏ.டி.எம்-மில் எவ்வளவு பணம் இருந்தது, கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர் யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe