கோவையில் கோர விபத்து; கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்த சோகம்!

published 7 months ago

கோவையில் கோர விபத்து; கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்த சோகம்!

கோவை: கோவையில் சாலையின் தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி நண்பர்களான இப்ராகிம், விஷால், பூபேஷ், நரேன், பிரணவ் ஆகியோர் கோவையில் உள்ள வெவ்வேறு கல்லூரிகளில் படித்து வந்துள்ளனர்.

நேற்று கோவை வந்த இவர்கள், காரில் மீண்டும் திருப்பூருக்கு சென்றனர். அவர்களது கார் கோவை மாவட்டம் கணியூர் சுங்கச் சாவடி அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளாகி அப்பளம் போல் நொறுங்கியது.

இந்த விபத்தில் காரில் பயணித்த விஷால், பூபேஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த இருவர் கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்து கருமத்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலையில் சென்ற கார் தடுப்பு சுவற்றில் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் கல்லூரி மாணவர்கள் மூவர் பலியாகிய சம்பவம் கோவையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe