பீளமேட்டில் இளம்பெண்ணிடம் 9 பவுன் நகை பறிப்பு!

published 6 months ago

பீளமேட்டில் இளம்பெண்ணிடம் 9 பவுன் நகை பறிப்பு!

கோவை: கோவை பீளமேடு கேஎஸ் புரம் இந்திரா நகர் தொகுதியை சேர்ந்தவர் ராஜலட்சுமி (32).

நேற்று முன்தினம் மதியம் ராஜலட்சுமி வீட்டில் இருந்த போது சுமார் 22 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் பைக்கில் அங்கு வந்தனர்.

ராஜலட்சுமியிடம் இங்கே வாடகைக்கு வீடு கிடைக்குமா? என விசாரித்தனர்.
அப்போது அவர் வீடு காலி இல்லை எனக்கூறினார்.

அப்போது, ராஜலட்சுமியின் அருகே வந்த வாலிபர், அவர் கழுத்தில் இருந்த 9 பவுன் தங்க நகையை பறித்தார். பின்னர், தனது கூட்டாளியுடன் அங்கேயிருந்து பைக்கில் தப்பினார்.

அதிர்ச்சி அடைந்த ராஜலட்சுமி கூச்சல் போட்டார். ஆனால் அக்கம் பக்கத்தினர் வரும் முன் அவர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர். இது குறித்து பீளமேடு போலீசில் ராஜலட்சுமி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பைக்கில் தப்பி சென்ற கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

இவர்கள் நகை பறித்த காட்சி, வாலிபர்கள் முகம் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருப்பதாக தெரிகிறது. இதை வைத்து போலீசார் 2 பேரையும் தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe