தொண்டாமுத்தூர் அருகே யானையை விரட்டி சென்ற போது நிகழ்ந்த சோகம்...

published 6 months ago

தொண்டாமுத்தூர் அருகே யானையை விரட்டி சென்ற போது நிகழ்ந்த சோகம்...

கோவை: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரை அடுத்த விராலியூர் குடியிருப்பு பகுதிக்குள் நேற்றிரவு சுமார் 10 மணியளவில் காட்டுயானை வந்துள்ளது. உடனடியாக பூலாம்பட்டி வனத் துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர். 

தகவலையடுத்து விரைந்து சென்ற வனத் துறையினர் மற்றும் பொதுமக்கள் காட்டு யானையை வனப் பகுதிக்கு விரட்டினர். அப்போது ஒற்றைக் காட்டு யானை ஆக்ரோஷமாக அங்கு, இங்கும் சுற்றி திரிந்ததால் யாரும் யானையின் அருகே செல்ல வேண்டாம் என்று வனத் துறையினர் எச்சரித்துள்ளனர். 

இருந்த போதிலும் யானையை விரட்ட முற்பட்ட விராலியூர் இந்திரா காலனி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (24) என்ற இளைஞர் அவருடைய நண்பர் ஹரிஷ் (22) ஆகிய இருவரும் குடியிருப்பு பகுதிக்கு வந்த ஒற்றைக் காட்டு யானையை விரட்ட பின்னாடியே ஓடிச் சென்றுள்ளனர்.

அந்நேரத்தில் ஆக்ரோஷத்தில் இருந்த காட்டு யானை இவர்களைப் பார்த்து திரும்பி வந்துள்ளது. அதில் ஹரிஷ் அங்கு இருந்து தப்பி ஓடி விட்ட நிலையில் யானை துரத்தியதில் நிலை தடுமாறி கீழே விழுந்த கார்த்தியை யானை தூக்கி வீசி மிதித்துள்ளது. இதில் சம்பவ இடத்திலே அவர் உயிரிழந்தார். பின்னர் காட்டு யானை துரத்தியதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த ஹரிஷ் அங்கு உள்ள டாட்டா ஏ.சி வாகனத்தின் மூலம் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.

காட்டு யானையை விரட்ட வேண்டாம் என்று வனத் துறையினர் பலமுறை எச்சரிக்கை கொடுத்தும் கேட்காமல் யானையை  விரட்டச் சென்ற வாலிபர் யானை தாக்கி சம்பவ இடத்திலே உயிரிழந்தது அப்பகுதியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe