கோவை விமான நிலையத்தில் 2 கிலோ போதை பொருள் பறிமுதல்...

published 6 months ago

கோவை விமான நிலையத்தில் 2 கிலோ போதை பொருள் பறிமுதல்...

கோவை: கோவை விமான நிலையத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 2 கிலோ அளவிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பாங்காக்கில் இருந்து சிங்கப்பூர் வழியே கோவை வந்த ஆண் பயணியிடம் இருந்து போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

உளவுத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பயணியிடம் சோதனை இட்டபோது பச்சை நிறத்தில் கஞ்சா கலவையுடன் கூடிய போதைப் பொருள் என்பது தெரியவந்துள்ளது.

"குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உண்ணும் உணவு" பாக்கெட்டில் வைத்து மறைத்து வைத்து கடத்திய நிலையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பிடிபட்ட பயணியிடம் தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருளின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் என  முதற்கட்ட விசாரணையில் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe