கோவையில் இந்து முன்னணி கட்சி கொடிக்கு கீழ் பறக்கவிடப்பட்ட தேசியக்கொடி

published 2 years ago

கோவையில் இந்து முன்னணி கட்சி கொடிக்கு கீழ் பறக்கவிடப்பட்ட தேசியக்கொடி

கோவை: நாட்டின் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 13, 14, 15 ஆகிய மூன்று நாட்களுக்கு அனைவரின் வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றி கொண்டாடுமாறு பிரதமர் தெரிவித்திருந்தார். அதன்படி இன்று முதல் பலரது இல்லங்களிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டு வருகிறது. பல்வேறு கட்சியினரும் அவர்களது அலுவலகத்தில் இன்று தேசிய கொடி ஏற்றி வருகின்றனர்.

இந்த ஆண்டு சுதந்திர தினவிழா விமர்சையாக கொண்டாடுவதற்காக தேசிய கொடி ஏற்றிவதில் விதிகளுக்கு உட்பட்டு திருத்தங்களும் செய்யப்பட்டுள்ளன.

தேசிய கொடியை தனி கம்பத்தில் தான் ஏற்ற வேண்டுமெனவும் கட்சி கம்பங்களில் ஏற்ற கூடாது என விதி இருக்கும் போது கோவை ஒலம்பஸ் பகுதியில் இந்து முன்னணி கொடி கம்பத்தில் அந்த அமைப்பின் கொடிக்கு கீழ் தேசிய கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.

இது குறித்து தகவலறிந்து அங்கு சென்ற காவல்துறையினர் தேசிய கொடியை கட்சி கம்பத்தில் இருந்து அகற்றினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe