கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை- கோவையில் கிருஷ்ணர் ராதை வேடமிட்டு அசத்திய குழந்தைகள்...

published 5 months ago

கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை- கோவையில் கிருஷ்ணர் ராதை வேடமிட்டு அசத்திய குழந்தைகள்...

கோவை: கோகுலாஷ்டமியை முன்னிட்டு கோவை சிவானந்தா காலனி பகுதியில் விஸ்வ இந்து பரிஷத் சார்பில் 12 ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா அமைப்பின் தர்மாச்சார்யா தென் தமிழக அமைப்பாளர் இல. சிவலிங்கம் தலைமையில் நடந்த இந்த விழாவில், வி.ஹெச்.பி மாநில துணைத் தலைவர், என்.பரமசிவம்,  மாவட்டத் தலைவர் சிவராஜ், பா.ஜ.க மாவட்ட தலைவர் ரமேஷ் குமார், முன்னாள் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி, பா.ஜ.க இளைஞரணி மாவட்ட தலைவர் கிருஷ்ண பிரசாத் ஆகியோர்  முன்னிலையில் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். 

இதில் 100 - க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு சிவானந்தா காலனி பகுதியில் உள்ள வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து விழா மேடையில் நடனமாடி பார்வையாளர்களை கவர்ந்தனர்.

பகவான் கிருஷ்ணர் அவதரித்த தினம் கோகுலாஷ்டமி விழாவாக நாடெங்கிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விசுவ இந்து பரிசத் அமைப்பு சார்பில் 60-ம் ஆண்டு ஸ்தாபன தினம் நிறைவு விழா மற்றும் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

முன்னதாக விழாவை முன்னிட்டு நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி  விழா பேரணியில் ரத்தினபுரி பகுதியில் இருந்து 500 - க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் கிருஷ்ணன், ராதை வேடம் அணிந்து ஊர்வலமாக சென்றனர்.

சிவானந்தா காலனி பகுதியில் ஊர்வலம் நிறைவடைந்த நிலையில் அங்கு சிறுவர் சிறுமியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அப்போது மேடையில் தோன்றிய சிறுவர் சிறுமியர் பக்தி பாடல்களுக்கு நடனமாடி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர். 

அதனைத் தொடர்ந்து குழந்தைகளை மகிழ்விக்கும் விதமாக மேஜிக் ஷோ நடைபெற்றது. குழந்தைகளை பிரமிக்க வைக்கும் வகையில் மேஜிக் ஷோ செய்து அசத்தினர். தொடர்ந்து விழாவில் பங்கேற்ற சிறுவர், சிறுமியர் அனைவருக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe