கோவையில் தனியார் நிறுவனத்தில் புகுந்து கொள்ளை!

published 5 months ago

கோவையில் தனியார் நிறுவனத்தில் புகுந்து கொள்ளை!

கோவை: கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் அசீம் மணிகுண்ணன்(35). இவர் மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் இன்ஜினியரிங் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று நிறுவனத்தின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது.

இதனையடுத்து அசீம் மணிகுண்ணன், சூப்பர்வைசர் மகேந்திரன், மசூத் ஆகியோர் உள்ளே சென்று பார்த்த போது நிறுவனத்தில் இருந்த வெல்டிங் இயந்திரம், கிரைண்டிங் இயந்திரம் உள்பட ரூ. 1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனே இது குறித்து அசீம் மணிகுண்ணன் சுந்தராபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும் நிறுவனத்தில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

அதில், கொள்ளையில் ஈடுபட்டது குனியமுத்தூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்த டிரைவர் நாகூர்தீன்(30), சுந்தராபுரம் காமராஜ் நகரை சேர்ந்த ஈஸ்வரன்(56) என்பது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe