பிறந்து 7 நாட்களே ஆன குழந்தைக்கு இருதய சிகிச்சை- இரண்டரை மணி நேரத்தில் திருச்சியில் இருந்து கோவை வந்தடைந்த ஆம்புலன்ஸ்...

published 1 week ago

பிறந்து 7 நாட்களே ஆன குழந்தைக்கு இருதய சிகிச்சை- இரண்டரை மணி நேரத்தில் திருச்சியில் இருந்து கோவை வந்தடைந்த ஆம்புலன்ஸ்...

கோவை: பிறந்து 7 நாட்களே ஆன குழந்தைக்கு இருதய, அறுவை சிகிச்சை செய்வதற்காக, திருச்சியிலிருந்து போலீஸ் பாதுகாப்புடன் இரண்டரை மணி நேரத்தில் ஆம்புலன்ஸ் கோவை வந்தடைந்தது.

திருச்சி அரசு மருத்துவமனையில், பிறந்து 7 நாட்கள் ஆன குழந்தைக்கு, இருதய குறைபாடு இருந்துள்ளதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். மருத்துவ சிகிச்சை செய்ய கோவை ராமகிருஷ்ணா தனியார் மருத்துவமனையில் நவீன இயந்திரங்கள் இருப்பதால் கோவை அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

இன்று பிற்பகல் ஒரு மணி அளவில், திருச்சியில் இருந்து கிளம்பி ஆம்புலன்ஸ், காவல்துறை உதவியுடன் போக்குவரத்து நெரிசலில் மாட்டி கொள்ளாமல் சுமார் இரண்டரை மணி நேரத்தில் வேகமாக கோவை வந்தடைந்தது ஆம்புலன்ஸ் தங்கு தடையின்றி செல்வதற்காக, சாலை முழுவதும் கிரீன் காரிடார் ஏற்படுத்தி, காவல்துறையினர் வழிவகை செய்தனர்.

இதனால் இரண்டரை மணி நேரத்தில் குழந்தை பாதுகாப்பாக ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தது. தொடர்ந்து குழந்தைக்கு சிகிச்சையானது துவங்கியது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube

Subscribe
Whatsapp

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Subscribe