கோவையில் Whatsapp குழு அமைத்து வெளிநாட்டு பெண்கள் வைத்து விபச்சாரம்!

published 1 week ago

கோவையில்  Whatsapp குழு அமைத்து வெளிநாட்டு பெண்கள் வைத்து விபச்சாரம்!

கோவை: வாட்ஸ் அப் குழு ஏற்படுத்தி, வெளிநாட்டு பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய இரண்டு புரோக்கர்களை, கோவை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.  15 பெண்கள் மீட்கப்பட்டு  காப்பகத்தில் ஒப்படைக்கப் பட்டுள்ளதாக கோவை, மாநகர காவல்துறையின் துணை ஆணையர்( வடக்கு) ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகரில் நட்சத்திர ஹோட்டல்களில் வெளிநாட்டு பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பதாக, கோவை மாநகர காவல் துறைக்கு புகார்கள் வந்தன. இதனை தொடர்ந்து விசாரணையில் களமிறங்கிய கோவை தனிப்படை காவல்துறையினர், மேற்கு வங்கத்தில் பதுங்கி இருந்த விபச்சார தொழிலின் மூளையாக செயல்பட்ட சிக்கந்தர் பாதுஷா(41) என்பவரை கைது செய்தனர். இதனையடுத்து ஏஜெண்ட்  ஸ்டீபன் ராஜ்(30) என்பவரையும் கைது செய்தனர்.

இது குறித்து பேட்டியளித்த துணை ஆணையர் ஸ்டாலின், 

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், ஆல் இந்தியா ஏஜென்ட் குரூப் என்ற  whatsapp குழுவை ஏற்படுத்தி, 117 இந்தியா, ரஷ்யா, இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலுள்ள  ஏஜென்ட்டுகள் மூலம் விபச்சார தொழில் செய்வது தெரியவந்தது. கோவையில் உள்ள முக்கியமான 8 நட்சத்திர ஹோட்டல்களில் ,நீண்ட நாட்கள் தங்கி இருந்தவர்கள் மற்றும் வந்து சென்றவர்கள் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டது. இதன் அடிப்படையில்  விபச்சாரத்தில் ஈடுபட்ட 15 பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

whatsapp குழு மூலம் விபச்சாரத் தொழில் செய்த நபர்களிடமிருந்து 10 சிம்கார்டுகள், 16 செல்போன்கள்,7  வங்கி கணக்கு புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் whatsapp மூலமாக விபச்சாரத் தொழிலை, வெளிநாட்டு பெண்களை வைத்து செய்து வந்த கபீர் சிங் என்ற முக்கிய குற்றவாளியை தேடி வருவதாக, தெரிவித்தார். மேலும் இந்தியா முழுவதும் ஏஜென்ட்களாக செயல்பட்டு வரும் 117 நபர்களை பிடிக்க 12 பேர் கொண்ட நான்கு தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்றார். 

சிக்கந்தர் பாதுஷா மீது கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 13 வழக்குகள், கோவையில் மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ,இவர் மீது பதிவு செய்யப்பட்ட விபச்சார குற்ற வழக்குகளில் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றார். மேலும் அவர் கூறுகையில் பிணையில் வரமுடியாத பிடிவாரண்டு பிறபிக்கப்பட்டும் நிலுவையில் உள்ளதாக தெரிவித்தார். விபச்சாரத்தில் கிடைத்த லாப பணத்தில் பெங்களூரில் பிரியாணி கடை நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டார். 

ஹோட்டல்கள் மீதும் நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும், குற்றவாளிகள் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube

Subscribe
Whatsapp

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Subscribe