கோவையில் மூளை சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்- இளைஞரின் உடலுக்கு அரசு மரியாதை…

published 2 days ago

கோவையில் மூளை சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்- இளைஞரின்  உடலுக்கு அரசு மரியாதை…

கோவை: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுக்கா கடத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் ராஜா. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உடுமலை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது எதிர்பாராதமாக விபத்து ஏற்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த பிரார்த்திக் ராஜா தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்தார்.

இந்நிலையில் கார்த்திக் ராஜாவின் உடல் உறுப்புகள் இன்று தானம் செய்யப்பட்டது.அதனைத் தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில்
அவரது உடலுக்கு தலைமை மருத்துவ அலுவலர்கள் மற்றும் மருத்துவர்கள் அரசு மரியாதை அரசு மரியாதை செய்தனர். பின்னர் அவரின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube

Subscribe
Whatsapp

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Subscribe