கோவையில் நடனப்போட்டியில் கலந்து கொண்ட சாண்டி மாஸ்டர்

published 2 years ago

கோவையில் நடனப்போட்டியில் கலந்து கொண்ட சாண்டி மாஸ்டர்

கோவை: கோவையில் நடைபெற்ற சகோதயா ஸ்கூல் காம்ப்ளக்ஸ் கூட்டமைப்பின் நடன போட்டியில் பிரபல நடன இயக்குனர் சாண்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

கோயமுத்தூர் சகோதயா ஸ்கூல் காம்ப்ளக்ஸ் கூட்டமைப்பின் 43 வது ஆண்டு பள்ளிகளுக்கான நடன போட்டிகள் கோவை இடையர்பாளையம் பகுதியில் உள்ள பெங்க்லன் பப்ளிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

பள்ளியின் நிர்வாக இயக்குனர் அபிஷேக் ஜாக்சன் தலைமையில் நடைபெற்ற இதில்,பள்ளியின் தாளாளர் ஃப்ராங்க் டேவிட்,முதல்வர் மார்கரேட் தேவ கிருபை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோவை,திருப்பூர்,மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 47 பள்ளிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டு நடனமாடினர். தில்,சிறப்பு விருந்தினராக பிரபல நடன இயக்குனர் சாண்டி கலந்து கொண்டு,

சிறந்த குழுவினருக்கு பரிசுகள் வழங்கினார். தொடர்ந்து மாணவ,மாணவிகளுடன் நடனமாடி செல்பி எடுத்து மகிழ்ந்தார்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe