கோவையில் மூதாட்டி உட்பட 2 பேரிடம் 10 பவுன் நகை பறிப்பு - பைக் ஆசாமிகள் கைவரிசை…

published 1 week ago

கோவையில் மூதாட்டி உட்பட 2 பேரிடம் 10 பவுன் நகை பறிப்பு - பைக் ஆசாமிகள் கைவரிசை…

கோவை: கோவை சுந்தராபுரம் எல்ஐசி காலனியை சேர்ந்தவர் அனுஷ்யா(78). இவர் நேற்று அங்குள்ள சாய் நகரில் நடந்து சென்று கொண்டிருந்தார். 

அப்போது அங்கு பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் திடிரென மூதாட்டி கழுத்தில் கிடந்த 7 1/2 பவுன் தங்க சங்கிலியை பறித்து தப்பி சென்றனர். இது குறித்து அனுஷ்யா சுந்தராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 

அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்து தப்பிய ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டை சேர்ந்தவர் வெங்கடேஷ்(38). இவர் நேற்று இரவு ஸ்கூட்டரில் டிபன் வாங்க ஓட்டலுக்கு சென்று கொண்டிருந்தார். 

அப்போது சுந்தராபுரம் எல்ஐசி அருகே சென்றபோது அவரை பின் தொடர்ந்து பைக்கில் வந்த 2 பேர் திடீரென வெங்கடேஷ் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இது குறித்து வெங்கடேஷ் சுந்தராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 

அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இந்த இரண்டு நகை பறிப்பு சம்பவங்களும் ஒரே நாளில், ஒரே பகுதியில் அடுத்தடுத்து நடந்ததால் இதில் ஈடுபட்டவர்கள் ஒரே கும்பலாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து போலீசார் சம்பவம் நடந்த பகுதிகளில் சிசிடிவி கேமரா காட்சிகளை சேகரித்து நகை பறிப்பு ஆசாமிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe