வக்ஃபு வாரிய திருத்தச்சட்டம்- கோவையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரக்கணக்கானோர் கண்டன பேரணி...

published 6 days ago

வக்ஃபு வாரிய திருத்தச்சட்டம்- கோவையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரக்கணக்கானோர் கண்டன பேரணி...

கோவை: வக்ஃப் வாரிய திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை கோவை மாவட்ட அனைத்து ஜமாத் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினர் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

வக்பு வாரியத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும், வக்ஃப்பு வாரிய சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும்  கோவை, ஆத்துப்பாலம்- உக்கடம் வரை அனைத்து ஜமாத் இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சி கூட்டமைப்பினர் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர் .

இந்த பேரணியில் எச்சரிக்கிறோம் எச்சரிக்கிறோம் வக்ஃபு திருத்த சட்டத்தை எச்சரிக்கிறோம், வக்ஃபு வாரிய சட்டத்தை நிராகரிப்போம், வக்ஃபு வாரிய சட்டத்தை திரும்ப பெற வேண்டும், வக்ஃபு வாரிய சட்டம் சிறுபான்மை மக்களுக்கு எதிரானது போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பேரணி மேற்கொண்டனர். 

இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்து கொண்டனர். 

இது குறித்து இஸ்லாமிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுல்தான் அமீர் கூறும்போது, கோவை மாவட்டத்தில் அனைத்து ஜமாத்துக்கள், இஸ்லாமிய இயக்கங்கள், அனைத்து அரசியல் கட்சியினர் வக்ஃபு திருத்தச் சட்டம் என்ற பெயரில் சொத்துக்களை அபகரிக்கும் சட்டத்தை, கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார். 

அன்பிற்குரிய பிரதமரே, ஏற்கனவே சி.ஏ.ஆர்., என்.ஆர்.சி., முத்தலாக் திருத்த சட்டம் போன்ற பல்வேறு மத பதட்டத்தை தூண்டக் கூடிய சட்டத்தை கொண்டு வந்ததாகவும் அந்த சட்டத்தால் இந்திய தேசத்தில் எந்த விதமான வளர்ச்சியும் வரவில்லை என்றும், சி.ஏ.ஆர் சட்டத்தால் எந்த இந்துக்களும் முன்னேற்றம் அடையவில்லை என்றும், முத்தலாக் சட்டத்தால் எந்த இஸ்லாமியரும் முன்னுக்கு வரவில்லை, வேளாண் சட்டத்தால் எந்த விவசாயிகளும் முன்னுக்கு வரவில்லை என்றார்

பிரதமர் கொண்டு வருகின்ற சட்டங்கள் எல்லாம் மத பதற்றத்தை தூண்டுகிறதே தவிர, குப்பையில் போடுகின்ற சட்டங்களாக உள்ளது தயவு செய்து, மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை கொண்டு வாருங்கள், உதாரணமாக இன்றைக்கு அமெரிக்க அரசாங்கம் இந்திய பொருள்களுக்கு ஒரு அநியாய வரியை விரித்து உள்ளனர். அந்த அநியாய வரிக்கு எதிராக பாராளுமன்றத்தில் ஒரு தீர்மானத்தை கொண்டு வாருங்கள், ஒட்டுமொத்த இந்துக்கள் சார்பாக ஒட்டுமொத்த கிறிஸ்துவ சார்பாக ஒட்டுமொத்த முஸ்லிம்கள் சார்பாக எல்லாருமே அந்த சட்டத்தை பாராளுமன்றத்தில் ஆதரிப்பார்கள், வரவேற்பார்கள் என தெரிவித்தார்.  

முன்னேற்றத்திற்கான திட்டத்தை கொண்டு வாருங்கள்,  பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தில் 4 கோடி வீடு கட்டுவதாக சொன்னார்கள், இன்றைக்கு இருக்கின்ற முஸ்லிம்கள் வீடுகள் எல்லாம் இடிக்கின்ற சூழ்நிலைக்கு உருவாக்கி உள்ளதாகவும், உத்தரப்பிரதேசத்தில் இருக்கின்ற அரசாங்கம் அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் புல் டவுசர் ஓட்டக் கூடிய பயிற்சி அளித்து இஸ்லாமியர்கள் வீடுகள் அனைத்தும் தரைமட்டமாக்கப்பட்டு ஒரு புறத்தில் 4 கோடி வீடு கட்டி கொடுத்ததாக சொன்னீர்கள், இன்னொரு புறம் முஸ்லிம்களின் வீடுகளை இடித்துக் கொண்டு உள்ளதாக குற்றம் சாட்டிய அவர், பாரதப் பிரதமரே வளர்ச்சிக்கான திட்டத்தை கொண்டு வாருங்கள்.

ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்தினர் உங்களுக்கு ஆதரவு தெரிவிக்க தயாராக இருக்கிறோம் என்றும், நீங்கள் கொண்டு வரக் கூடிய சட்டத்தால் இந்த நாட்டிற்கு எந்த பயனும் இல்லை என்றும் ஒட்டுமொத்த இந்திய சமூகத்திற்கும் இந்த நாட்டிற்கும் நாங்கள் தெரியப்படுத்துகிறோம் தயவு செய்து வேளாண் திருத்த சட்டத்தை வாபஸ் வாங்கியது போன்று, எந்த பலனும் இல்லாத இந்த வகஃப்பு திருத்த சட்டத்தை தயவுசெய்து வாபஸ் வாங்குமாறு இஸ்லாமிய சமூகத்தின் சார்பாக கோரிக்கையாக வைக்கிறோம் என்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe