நரசிம்மநாயக்கன் பாளையம் பகுதியில் குரங்கு மீட்பு- வீடியோ காட்சிகள் உள்ளே...

published 2 weeks ago

நரசிம்மநாயக்கன் பாளையம் பகுதியில் குரங்கு மீட்பு- வீடியோ காட்சிகள் உள்ளே...

கோவை: கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட நரசிம்மநாயக்கன்பாளையம் புதுப்பாளையம் பகுதியில் உள்ள தடுப்பணையில், சுற்றியும் தண்ணீருக்கு இடையே இருந்த காய்ந்த மரக்கிளையில், குரங்கு ஒன்று நகர முடியாமல் சிக்கிக்கொண்டது.

இதனைக் கண்ட பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனச்சரகர் தலைமையிலான குழுவினர் குரங்கு நீரில் இருந்து கடந்து வர ஏதுவாக நீரில் மிதக்கும் வகையில் பாதை அமைத்து கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில், இன்று குரங்கு அந்தப் பாதையை பயன்படுத்தி நீர் நிலையை விட்டு வெளியேறியது. இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

குரங்கு நன்றாக நீந்திச் செல்வதை உறுதி செய்துள்ள வனத்துறையினர் அதனை பிடிக்க அப்பகுதியில் கூண்டுகள் வைத்து கண்காணித்து வருகின்றனர்.

வீடியோ காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://www.facebook.com/share/r/1AVnngXvWQ/
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe