கோவையில் சிகரெட் பற்ற வைத்த போது தீப்பிடித்து வாலிபர் பரிதாப பலி.!

published 2 years ago

கோவையில் சிகரெட் பற்ற வைத்த போது தீப்பிடித்து வாலிபர் பரிதாப பலி.!

கோவை: கோவை கருமத்தம்பட்டி உஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் (வயது 24). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சங்கீதா (24). இவர்களுக்கு கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் ரஞ்சித்துக்கு குடிப்பழக்கம் உள்ளது.  ரஞ்சித் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். 
 

அப்போது அவர் சிகிரெட்டை பற்ற வைத்தார். இதில் எதிர்பாராத விதமாக தீ அவரது உடையில் பற்றியது. தீ மளமளவென அவர் உடல் முழுவதும் பரவியது. வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் தீயை அணைத்து ரஞ்சித்தை மீட்டனர். 

பின்னர் அவரை கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

திருமணமான ஒரு வருடத்தில் வாலிபர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe