கோவையில் கட்டியிருந்த மாட்டைத் தள்ளிக்கொண்டு செல்ல முயன்ற நபர்..! - CCTV காட்சிகள்

published 2 years ago

கோவையில் கட்டியிருந்த மாட்டைத் தள்ளிக்கொண்டு செல்ல முயன்ற நபர்..! - CCTV காட்சிகள்

கோவை: கோவையில் மாடு திருடும்  சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

கோவை நீலாம்பூர் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார், வழக்கறிஞர். இவர் வீட்டிலுள்ள தோட்டத்தில் 5 ஆண்டுகளாக மாடுகளை வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் அவர் வீட்டில் நேற்று இரவு நாய்கள் சத்தமிட்டதால் அவரது மனைவி மற்றும் மகனிடம் சென்று பார்க்கச் சொல்லியுள்ளார். அங்கு சென்று பார்த்த போது கட்டியிருந்த மாட்டை காணவில்லை. பின்னர் அவர்கள் அங்கு பொருத்தியிருந்த சி.சி.டி.வி காட்சிகளைப் பார்த்தனர்.

அதில் மாட்டை  நபர் ஒருவர் அவிழ்த்துக் கொண்டு செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் அருகில் சென்று தேடிப் பார்த்துள்ளனர். இருட்டான பகுதியில் மாடு நின்று கொண்டு இருப்பதைக் கண்டு மீண்டும் அந்த மாட்டைத் தோட்டத்தில் கட்டியுள்ளனர்.

பின்னர் இது குறித்து  சூலூர் காவல்  நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர்  சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து அருகிலுள்ள லாரி நிறுத்துமிடம் போன்ற பகுதிகளுக்குச் சென்று தேடிப் பார்த்தனர். ஆனால் அந்த நபர் பிடிபடவில்லை.  இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோவைக் காண: 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe