தாய் கண்டித்ததால் வனக் கல்லூரி மாணவி தற்கொலை

published 2 years ago

தாய் கண்டித்ததால் வனக் கல்லூரி மாணவி தற்கொலை

 

கோவை: கோவை தடாகம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகள் அர்ச்சனா (வயது 21). இவர் மேட்டுப்பாளையம் வனக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

சம்பவத்தன்று  அர்ச்சனா வீட்டில் இருந்தார். அப்போது அவரது தாய் மற்றும் தந்தை சண்டை போட்டுக் கொண்டனர். அவரது தந்தை சென்ற பிறகு அர்ச்சனாவின் தாயார் அவரிடம் சண்டை போடும்போது நீ எனக்கு ஆதரவு தர மாட்டையா எனக் கூறி அவரை கண்டித்தார்.

இதனால் அர்ச்சனா மன வேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர். பின்னர் இதுகுறித்து தடாகம் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர்
சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe