கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை

published 2 years ago

கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை

 

கோவை: கோவை அன்னூர் செல்லப்பம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் (வயது 23), எலக்ட்ரீசியன். இவருக்குக் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டது. இதன் பின்னர் அதற்காகச் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் குணமடையவில்லை. இதனால் அவர் மனவேதனையுடன் இருந்து வந்தார்.

சம்பவத்தன்று அருண்குமார் வீட்டில் வேலைக்குச் செல்வதாகக் கூறிச் சென்றார். அப்போது விரக்தி அடைந்த அவர் செல்லப்பம்பாளையம் பகுதியிலுள்ள கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அன்னூர் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து அருண்குமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe