கோவையில் குழந்தை தொழிலாளர் மீட்பு

published 2 years ago

கோவையில் குழந்தை தொழிலாளர் மீட்பு

 

கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் இடிகரை ரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் பணியில் உள்ளதாக ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தேசிய குழந்தைகள் நலத் திட்ட அதிகாரிகளுக்குப் புகார் வந்தது.

அதன்படி, குறிப்பிட்டத்  தனியார் நிறுவனத்திற்கு நேரில் சென்று அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அங்கு 16 வயதுடைய சிறுவன் பணிக்கு அமர்த்தியது தெரியவந்தது.

இதையடுத்துச் சிறுவனை அதிகாரிகள் மீட்டு, இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், காவல்துறைக் கோவை சாய்பாபா கோவில் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர் அரவிந்த் என்பவர் மீதுக் குழந்தைத் தொழிலாளர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe