கீரணத்தம் பகுதியில் புதிய டாஸ்மாக் அமைக்க எதிர்ப்பு

published 2 years ago

கீரணத்தம் பகுதியில் புதிய டாஸ்மாக் அமைக்க எதிர்ப்பு

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :  https://chat.whatsapp.com/KsPYwSVgSwPDblO1iteFxE

கோவை:  கோவை கீரணத்தம் அடுத்த காந்திநகர் பகுதியில் புதிதாக அமையவிருக்கும் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கோவை கீரணத்தம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து மனு ஒன்றை அளித்தனர் அந்த மனுவில் கூறியதாவது :

எங்களது கிராமத்தில் விவசாய நிலம் ஒன்றில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்த டாஸ்மாக் கடை அமையக் கூடாது என்று வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடமும், டாஸ்மாக் மேலாளரிடமும் கடிதம் கொடுத்துள்ளோம்.  தற்போது அமையவிருக்கும் டாஸ்மாக் கடையிலிருந்து 20 மீட்டர் தொலைவுக்குள் சிறுவர் பூங்கா, கோவில்கள் உள்ளன.  மேலும் பெண் குழந்தைகள் அந்த வழியாகத்தான் பள்ளிக்குச் செல்ல வேண்டும். ஏற்கனவே எங்கள் ஊரில் இரண்டு டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதனால் ஏராளமான பிரச்சினைகளை சந்தித்து வருகிறோம். எனவே மீண்டும் டாமாக் கடை அமையக்கூடாது.

 இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe