மதுக்கரை அருகே மனைவி பீடி தராததால் முதியவர் விஷம் குடித்துத் தற்கொலை

published 2 years ago

மதுக்கரை அருகே மனைவி பீடி தராததால் முதியவர் விஷம் குடித்துத் தற்கொலை

 

கோவை: கோவை மதுக்கரையை அடுத்த வலுக்குப்பாறையைச் சேர்ந்தவர் காளிசாமி (வயது 60), தொழிலாளி.

அவர் கடந்த சில வருடங்களாக உடல் நிலை சரியில்லாமல் அவதியடைந்து வந்தார். அதற்காக அவர் கோவையிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். காளி சாமிக்குப் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளது.

சிகிச்சை பெற்று வருவதால் மருத்துவர்  அவரைப்  புகை பிடிப்பதைக் கைவிடுமாறு அறிவுரைக் கூறினர். இதனால் அவரது மனைவி அவரை புகை பிடிக்காமல் பார்த்து வந்தார்.

சம்பவத்தன்று காளிசாமி  தனது மனைவியிடம் புகைப் பிடிக்க வேண்டும் எனக் கூறி பீடி கேட்டார். ஆனால் அவர் தர மறுத்து அவருக்கு அறிவுரைக் கூறினார். இதனால் மனவேதனை அடைந்த அவர் விரக்தி அடைந்து வீட்டிலிருந்த விஷத்தைக் குடித்து மயங்கி விழுந்தார்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாகத் தெரிவித்தார். பின்னர் இதுகுறித்து மதுக்கரை காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்துக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe