கோவையில் செல்போன் எண் கேட்டு கல்லூரி மாணவி மீது தாக்குதல்

published 2 years ago

கோவையில் செல்போன் எண் கேட்டு கல்லூரி மாணவி மீது தாக்குதல்

கோவை: கோவை சுகுனாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தேவப்பிரசாத். இவரது மகள் அபிநயாஸ்ரீ (வயது 20). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார்.

சம்பவத்தன்று இவர் வழக்கம் போலக் கல்லூரிக்குச் சென்றார். மாலை கல்லூரி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக சுகுனாபுரம் பேருந்து நிறுத்தத்திலிருந்து நடந்து சென்றார்.

அப்போது அங்கு வாலிபர் ஒருவர் வந்தார். அவர் திடீரென அபிநயா ஸ்ரீ அருகில் வந்து பேசினார். ஆனால் அவர் அதைக் கண்ட கொள்ளாமல் நடந்து சென்றார். பின்னர் அந்த வாலிபர் அவரின் செல்போன் எண்ணைக் கேட்டார்.

அதற்கு அவர் அந்த வாலிபரைக் கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் அவரைத் தகாத வார்த்தைகளால் திட்டி அவரைக் கீழே தள்ளி விட்டு மிரட்டிச் சென்றார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குச் சென்று தனது பெற்றோரிடம் நடந்தவற்றைக் கூறினார்.

பின்னர் அவர்கள்  அபிநயா ஸ்ரீ-யை அழைத்துக்கொண்டு  காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றனர். அங்கு அபிநயா ஸ்ரீ புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe