கவுண்டம்பாளையம் பகுதியில் வீடு புகுந்து மிக்சி, டிவி-யை தூக்கி சென்ற மர்ம நபர்…

published 3 days ago

கவுண்டம்பாளையம் பகுதியில் வீடு புகுந்து மிக்சி, டிவி-யை தூக்கி சென்ற மர்ம நபர்…

கோவை: அடுத்த கவுண்டம்பாளையத்தில் வீட்டு பூட்டை உடைத்து நகை திருடி சென்ற மர்ம நபர் அங்கிருந்த மிக்சி, டிவி-யையும் தூக்கி சென்றார்.

கோவை கவுண்டம்பாளையம் அம்பேத்கர் நகர் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த சுஜோஜ் குமார் மனைவி மூகாம்பிகை (38). இவர் கோவையில் உள்ள மருந்துக்கடையில் வேலை பார்த்து வருகிறார். காலை 8.30 மணிக்கு வேலைக்கு சென்று மாலை 6.30 மணிக்கு வீடு திரும்புவார். 

இதேபோல் நேற்று காலை அவர் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். இந்நிலையில், மதியம் அவரது வீட்டு கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் பார்த்தனர். இதுகுறித்து மூகாம்பிகைக்கு தகவல் கொடுத்தனர். 

அவர் உடனே வீட்டுக்கு வந்து பார்த்தபோது, உடைமைகள் அனைத்தும் சிதறி கிடந்தன. மர்ம நபர் வீட்டு பீரோவில் இருந்த 14 கிராம் தங்கம், ஒரு டிவி, ஒரு மிக்சி, ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்றது தெரியவந்தது. 

இதனால் அதிர்ச்சியடைந்த மூகாம்பிகை கவுண்டம்பாளையம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து திருட்டில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe