கோவையில் பெண்ணிடம் நகையைப் பறித்த வாலிபரை மடக்கி பிடித்த மக்கள்

published 2 years ago

கோவையில் பெண்ணிடம் நகையைப் பறித்த வாலிபரை மடக்கி பிடித்த மக்கள்

கோவை: கோவை சரவணம்பட்டி விநாயகபுரம் அம்மன் நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன், மனைவி காஞ்சனா(60). இவர் கோவையிலுள்ள துணிக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று அவர் தனது பேத்தியுடன் வீட்டின் அருகிலுள்ள காய்கறிக் கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென அவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க சங்கிலியைப் பறித்துத் தப்பிக்க முயன்றார்.

அதிர்ச்சியில் கூச்சல் போட்டபடி காஞ்சனா அந்த வாலிபரைத் துரத்தினார். இதில் அந்த வாலிபர் தவறி கீழே விழுந்தார். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த வாலிபரைப் பிடித்து காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையியனர் நடத்திய விசாரணையில், நகையைப் பறித்த வாலிபர் விநாயக புரத்தைச் சேர்ந்த முத்து பாலாஜி (23) என்பது தெரியவந்தது. காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

இதையும் பார்க்கலாமே..

கோவையில் தீபாவளி அதிரடி சலுகையாக ரூ.16000 மதிப்புள்ள மொபைல் ரூ.2800 மட்டுமே...: https://youtu.be/vYjLHpSsQ6E

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe