தொடர் மழையால் அதிகரித்த சிறுவாணி அணையின் நீர்மட்டம் சரிந்தது

published 2 years ago

தொடர் மழையால் அதிகரித்த சிறுவாணி அணையின் நீர்மட்டம்  சரிந்தது

கோவை: கோவை மாநகரில் 26 வாா்டுகள் மற்றும் நகரையொட்டியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குப் பிரதான குடிநீர் ஆதாரமாகச் சிறுவாணி அணை விளங்குகிறது. ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தீவிரமாகும் தென்மேற்குப் பருவ மழையால், சிறுவாணி அணை முழுக்கொள்ளவான 878. 50 மீட்டர் (49 அடி) நீர்மட்டத்தை எட்டும்.

இந்த ஆண்டு மே, ஜூன் மாதங்களில் 873 மீட்டராக இருந்த அணையின் நீர்மட்டம், ஜூலை முதல் ஆகஸ்ட் வரை பெய்த தென்மேற்குப் பருவ மழையால் 876 மீட்டர் வரை உயர்ந்தது.

இதைத் தொடர்ந்து, செப்டம்பர் மாதத்தில் இடைவெளி விட்டு, சிறுவாணி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால், அணையின் நீர்மட்டமானது 877 மீட்டராக உயர்ந்தது. இதையடுத்து, அணையிலிருந்து குடிநீருக்காக எடுக்கப்பட்ட தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டது. ஆற்றிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

தற்போது மழைப் பொழிவு இல்லாததால் அணையின் நீர்மட்டமானது படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளது. இதனால், கடந்த வாரங்களில் 876 மீட்டாராக இருந்த அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை நிலவரப்படி 874 மீட்டாராகக் குறைந்துள்ளது.

இது தொடர்பாக, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், "அணையில் போதிய அளவுக்கு குடிநீர் இருப்பு உள்ளது. தற்போது, குறைந்து வரும் நீர்மட்டத்தால் கோவை மாநகரப் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது." என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe