கோவையில் ஏ. டி. எம். மில் நிரப்புவதற்காக வங்கியில் பணம் பெற்று ரூ.1½ லட்சம் மோசடி: காவல்துறை விசாரணை

published 2 years ago

கோவையில் ஏ. டி. எம். மில் நிரப்புவதற்காக வங்கியில் பணம் பெற்று ரூ.1½ லட்சம் மோசடி: காவல்துறை விசாரணை

கோவை: கோவை கணபதி பாரதி நகரைச் சேர்ந்தவர் அன்பரசு (வயது 42). இவர் ஏ. டி. எம். மில் பணம் நிரப்பும் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார்.

இவர் சரவணம்பட்டி போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
"எங்கள் நிறுவனத்தில் பிரகாஷ் என்பவர் வேலை செய்து வந்தார். அவர் வங்கிகளுக்குச் சென்று ஏ. டி. எம்.-மில் நிரப்புவதற்காகப் பணத்தை வாங்கி வரும் வேலைகளைச் செய்து வந்தார்.

அவ்வாறு வாங்கி வரும் பணத்தை  ஏ. டி. எம்.-மில் நிரப்புவதற்கு ஊழியர்களுக்குப் பிரித்துக் கொடுப்பது வழக்கம். இந்த நிலையில் நான் கணக்கு வழக்கைப் பார்த்த போது அதில் ரூ. 1 லட்சத்து 42 ஆயிரம் குறைவாக இருந்தது.  

உடனே நான் ஊழியர்களிடம் விசாரித்தேன். அப்போது பிரகாஷ் ரூ. 1 லட்சத்து 42, ஆயிரத்தை எடுத்ததை ஒப்புக்கொண்டார். பின்னர் அவர் அந்த பணத்தைத் திருப்பி தருவதாகக் கூறினார்.

ஆனால் இதுவரை அவர் அந்த பணத்தைத் திருப்பித் தரவில்லை. அவர் பணத்தை எடுத்து மோசடியில் ஈடுபட்டுள்ளார். எனவே அந்த பணத்தை அவரிடம் இருந்து பெற்று அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்." இவ்வாறு அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து சரவணம்பட்டி காவல்துறையினர் பிரகாஷ் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe