பொறியியல் படிக்கச் சொன்ன பெற்றோர்: அழகுக்கலை பயின்ற மாணவி தற்கொலை

published 2 years ago

பொறியியல் படிக்கச் சொன்ன பெற்றோர்:  அழகுக்கலை பயின்ற மாணவி தற்கொலை

கோவை: மேட்டுப்பாளையம் பங்களமேடு மாசாணியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் அருள்நாதன். இவரது மகள் கவுசல்யா (வயது 21).

இவர் கோவை டி. வி. எஸ் நகர்ப் பகுதியில் உள்ள அழகு நிலையத்தில் வேலை செய்து அழகுக் கலை பயின்று வருகிறார். இந்த நிலையில் கவுசல்யாவின் பெற்றோர் பள்ளிப் படிப்பை முடித்து பொறியியல் படிக்குமாறு கூறி வந்தனர்.

ஆனால் அவர் அழகுக் கலையில் அதிக ஆர்வத்துடன் இருந்து வந்தார். இதனால் கவுசல்யா பொறியியல் படிக்காமல் அழகுக் கலையைப் படித்து வந்தார். இதனால் அவரது பெற்றோர் கவுசல்யா மீது கோபம் அடைந்து அவருடன் சரியாகப் பேசாமல் இருந்து வந்தனர்.

இதனை நினைத்து அவர் மனவேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து மேட்டுப்பாளையம் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் கஸ்தூரிப்பாளையத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி (48). இவர் துணி வியாபாரம் செய்து வந்தார். ஆனால் வியாபாரம் சரியாக இல்லாமல் தொழில் நஷ்டம் அடைந்தது.

அதனால் அவருக்கு போதிய வருமானம் இல்லாமல் குடும்பம் நடத்தக் கஷ்டப்பட்டு வந்தார். இதனால் அவர் கடந்த சில நாட்களாக மனவேதனையுடன் இருந்து வந்தார்.

சம்பவத்தன்று விரக்தி அடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe