கோவை மாநகராட்சியில் 8 நகர்ப்புற நலவாழ்வு மையங்களின் கட்டுமானப் பணிகள் நிறைவு

published 2 years ago

கோவை மாநகராட்சியில் 8 நகர்ப்புற நலவாழ்வு மையங்களின் கட்டுமானப் பணிகள் நிறைவு

கோவை: தமிழகம் முழுவதும் 1000 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு தமிழக அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, கோவை மாநகராட்சியில் தலா ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் 63 நகர்ப்புற சுகாதார நலவாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.

இந்நிலையில், 8 நகர்ப்புற நலவாழ்வு மையங்களின் கட்டுமானப் பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளதாகவும், 10 மையங்களின் பணிகள் முடிவுபெறும் நிலையில் உள்ளதாகவும், மற்ற மையங்களில் 50 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாகச் சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: 
"கோவை மாநகராட்சியில் 32 நகர்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், பொதுமக்களுக்கு மருத்துவ சேவை எளிதில் கிடைக்கும் வகையில் நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, கோவை மாநகராட்சியில் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் மக்கள்தொகை உள்ள பகுதிகளில் 63 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், ஒரு மருத்துவர் உள்ளிட்ட 4 பணியிடங்கள் உருவாக்கப்படும்.

8 மையங்களின் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. மற்ற மையங்களின் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் நியமிக்கப்பட்ட பின் நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்படும்." என்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe