கோத்தகிரி, குன்னூரில் பலத்த மழை- கொடநாடு சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

published 2 years ago

கோத்தகிரி, குன்னூரில் பலத்த மழை- கொடநாடு சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கோத்தகிரி: குன்னூர் சுற்றுப்புறப் பகுதிகளில் நேற்று காலை முதல் கனமழை பெய்தது. இதனால் முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. பலத்த மழைக்கு ராஜாஜி நகர்ப் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுத் தடுப்புச் சுவர் இடிந்து வீட்டின் மீது விழுந்தது. இதில் வீட்டிற்குள் இருந்தவர்கள் சிக்கிக் கொண்டனர்.

தகவல் அறிந்ததும் தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து வீட்டிற்குள் தவித்த குழந்தைகள் உள்பட 3 பேரையும் மீட்டனர். தகவல் அறிந்து வருவாய்த்துறையினர் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் விரைந்து வந்து அப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்ட வீடுகளில் மீட்புப் பணியைத் துரிதப்படுத்தி பணிகளை மேற்கொண்டனர்.

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. பல இடங்களில் சிறு, சிறு மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. நேற்று பெய்த மழையில் கோத்தகிரியிலிருந்து கொடநாடு செல்லும் பிரதான சாலையில் பெரிய மரம் ஒன்று முறிந்து விழுந்தது.

தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்த சோலூர்மட்டம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சாலையின் குறுக்கே விழுந்த மரத்தைப் போராடி அப்புறப்படுத்தினர். இதனால் இந்த பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe