சிறுவாணி அணை நீர்மட்டம் உயர்வு

published 2 years ago

சிறுவாணி அணை நீர்மட்டம் உயர்வு

கோவை: கேரளா மாநிலம் பாலக்காட்டில் உள்ள சிறுவாணி அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பருவமழை பெய்து வருவதால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் 40.08 அடியாக உயர்ந்துள்ளது.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 32 வார்டுகளுக்கும், வழியோரங்களில் உள்ள ஏராளமான கிராமங்களுக்கும் சிறுவாணி அணையிலிருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. 

சிறுவாணி அணையிலிருந்து தினமும் 10 கோடி லிட்டர் குடிநீர்த் தேவைக்காக எடுக்கப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வருவதால் அணைகள், குளங்களுக்குத் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. 

மேலும் நொய்யல் ஆற்றில் நீர் அதிகரித்துள்ளது. கோவைக்குக் குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் மழை காரணமாக 40.08 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் கோவைக்கு இனி வரும் நாட்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe