சூலூர் அருகே கம்ப்ரஸர் வெடித்து பொறியாளர் பலி

published 2 years ago

சூலூர் அருகே கம்ப்ரஸர் வெடித்து பொறியாளர் பலி

கோவை: சூலூர் அருகே முதலிபாளையம் பகுதியில் தனியார் நூற்பாலை இயங்கி வருகிறது. இங்கு நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை நூற்பாலையில் உள்ள கம்ப்ரஸர் பழுதானது. இதனால் கம்ப்ரஸரை வினியோகித்த நிறுவனத்துக்கு மில் ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர்.

பழுதை சரி செய்வதற்காக கம்ப்ரஸர் நிறுவனம் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த பொறியாளரான கோமதி சங்கர் (வயது 41) மற்றும் அவரது உதவியாளர் அனுப்பி வைக்கப்பட்டனர். கோமதி சங்கர் கம்ப்ரஸர் பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டார்.

அப்போது எதிர்பாராதவிதமாக கம்ப்ரஸர் வெடித்துச் சிதறியது. இதில் கோமதி சங்கர் சிக்கி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார். இது பற்றி சூலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆய்வாளர் மாதையன் மற்றும் காவல்துறையினர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் கோமதி சங்கரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe