வாக்காளர் பட்டியலில் மாணவர்களை சேர்க்கும் பணி துவக்கம்

published 2 years ago

வாக்காளர் பட்டியலில் மாணவர்களை சேர்க்கும் பணி துவக்கம்

கோவை: புதிய இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் விதமாக மாவட்ட நிர்வாகத்தினர் கல்லூரிகளுக்கு சென்று வாக்காளர் பட்டியலில் இணைப்பதற்கான விண்ணப்பங்களை வழங்கி வருகின்றனர்.

தேர்தல் ஆணையம் 18 வயது பூர்த்தியான அனைவருக்கும் வாக்காளர் அட்டை வழங்கிட அறிவுறுத்தி உள்ளது. எனவே கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளிலும் முதல் முறை வாக்காளர்களாக போகும் கல்லூரி மாணவ மாணவியர்களிடம் இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 

இதனிடையே கோவையில் உள்ள கல்லூரிகளுக்கு சென்று புதிய இளம் வாக்காளர்களை இணைக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, இன்று நிர்மலா மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கு வாக்காளர் அடையாள அட்டை பெறக்கூடிய படிவம் 6-ஐ துணை வட்டாட்சியர் கவிதா வழங்கினார். 

இதில் 200 மாணவிகள் படிவம் பெற்று அதனை பூர்த்தி செய்து கொடுத்தனர். இதன் மூலமாக வரும் இதனால் ஜனவரி மாதம் வெளியாகும் புதிய வாக்காளர் பட்டியலில் அவர்கள்  பெயர் சேர்க்கப்படும் என்றும் வாக்காளர் அடையாள அட்டை மாணவிகளின் வீடு தேடி வரும் என்றும் துணை வட்டாட்சியர் கவிதா தெரிவித்தார்.

இதுபோல் கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்றத்திற்கு உட்பட்ட அனைத்து கல்லூரிகளிலும் முதல்முறையாக வாக்களிக்க உள்ள கல்லூரி மாணவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்வதற்கான நடவடிக்கைகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe