கோவையில் தோண்டப்பட்டிருந்த குழியில் தவறி விழுந்து தொழிலாளி பலி

published 2 years ago

கோவையில் தோண்டப்பட்டிருந்த குழியில் தவறி விழுந்து தொழிலாளி பலி

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்: https://chat.whatsapp.com/KsPYwSVgSwPDblO1iteFxE 

கோவை: கோவை நெகமத்தை அடுத்த வெள்ளாளப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் காளிமுத்து (வயது 65), கூலித் தொழிலாளி. இவரது மனைவி மைலாத்தாள் (51). காளிமத்துக்குக் குடிப்பழக்கம் உள்ளது.
சம்பவத்தன்று காளிமுத்து தனது மனைவியிடம் கடைக்குச் சென்று வருவதாகக்  கூறி சென்றார். பின்னர் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் மைலாத்தாள் அவரை தேடிச் சென்றார்.
அப்போது அனுப்பர்பாளையம் பிரிவில் தோண்டப்பட்டு இருந்த குழியில் காளிமுத்து குடிபோதையில் விழுந்து இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe