கோவையில் ஓடும் பேருந்தில் இருந்து விழுந்த சிறுமி : வளைவில் திரும்பிய போது பரிதாபம்

published 2 years ago

கோவையில் ஓடும் பேருந்தில் இருந்து விழுந்த சிறுமி : வளைவில் திரும்பிய போது பரிதாபம்

கோவை: கோவை அன்னூர் அருகே உள்ள ருத்திரியாம்பாளையத்தை சேர்ந்தவர் வயது 15 சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளி முடிந்ததும் அரசு பேருந்து மூலமாக வீட்டிற்கு புறப்பட்டார்.

பேருந்து அன்னூர் கைகாட்டி சந்திப்பு அருகே வளைவில் திரும்பும் போது சிறுமி பேருந்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாகச்சென்றவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe