ஊட்டி-கோத்தகிரி சாலையில் பைக் ரேசில் ஈடுபட்ட 3 பேரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்

published 2 years ago

ஊட்டி-கோத்தகிரி சாலையில் பைக் ரேசில் ஈடுபட்ட 3 பேரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்

ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டியிலிருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் 2 மோட்டார் சைக்கிள்களில் சென்ற வாலிபர்கள் பைக் ரேசில் ஈடுபட்டனர்.

மோட்டார் சைக்கிள்கள் ஒவ்வொன்றும் பயங்கர சத்தத்துடன் வேகமாகச் சாலைகளில் சென்றன. அதில் சென்ற வாலிபர்கள் 'வீலிங்' செய்தபடி பாய்ந்து சென்றனர். 
இதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அங்கு திரண்ட அவர்கள், அதே பாதையில் மோட்டார் சைக்கிள்களில் திரும்பி வந்த வாலிபர்களை மடக்கிப் பிடித்தனர். அப்போது பொதுமக்களுக்கும், வாலிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் ஊட்டி மத்திய காவல் ஆய்வாளர் மணி குமார், துணை-ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் ஊட்டி நகரைச் சேர்ந்த தினேஷ் பாலன் (வயது 25), தீபக்ராஜ் (24), ரித்தீஷ்(24) ஆகியோர் என்பதும், தனியார் நிறுவனத்தில் ஊழியர்களாக பணியாற்றும் இவர்கள் இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டால் அவர்களுக்கு மட்டுமின்றி பிறருக்கும் பாதிப்பு ஏற்படும். எனவே இளைஞர்கள் யாரும் இதுபோன்ற செயலில் ஈடுபட வேண்டாம் என்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe