நல்லாம்பாளையத்தைச் சேர்ந்த கொரியர் நிறுவன மேலாளரைத் தாக்கிய வங்கி ஊழியர்

published 2 years ago

நல்லாம்பாளையத்தைச் சேர்ந்த கொரியர் நிறுவன மேலாளரைத் தாக்கிய வங்கி ஊழியர்

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்:  https://chat.whatsapp.com/KsPYwSVgSwPDblO1iteFxE

கோவை: கோவை கணபதி நல்லாம்பாளையத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார்(47). இவர் சாய்பாபா காலனியில் செயல்பட்டு வரும் கொரியர் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று அவர் பணியிலிருந்த போது வங்கி ஊழியர் ஒருவர் வங்கி தபால்களை அனுப்புவதற்காக வந்தார்.
அப்போது செந்தில்குமார், ஏற்கனவே 2 மாதமாக அனுப்பப்பட்ட தபால்களுக்குப் பணம் செலுத்தவில்லை. பழைய பாக்கியை எப்போது கட்டுவீர்கள் எனக் கேட்டுள்ளார். இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுத் தகராறாக மாறியது. ஆத்திரமடைந்த வங்கி ஊழியர் தகாத வார்த்தைகளால் பேசி கொரியர் நிறுவன மேலாளர் செந்தில்குமாரைத் தாக்கிவிட்டு மிரட்டிச் சென்றார். 
இதில் காயமடைந்த அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். இது தொடர்பான புகாரின் பேரில், சாய்பாபா காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்குதல் நடத்திய வங்கி ஊழியர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe