பாபர் மசூதி இடிப்பு தினம் கோவையில் 5 ஆயிரம் காவல்துறையினர் குவிப்பு

published 2 years ago

பாபர் மசூதி இடிப்பு தினம் கோவையில் 5 ஆயிரம் காவல்துறையினர் குவிப்பு

கோவை: பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி (டிசம்பர் 6) கோவையில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மாநகர காவல் ஆணையர் வே. பாலகிருஷ்ணன் தலைமையில் மாநகரில் 4 ஆயிரம் காவலர்களும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தலைமையில் புறநகர்ப் பகுதியில் ஆயிரம் காவலர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையம் ஆகிய பகுதிகளில் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சோதனைச் சாவடிகளிலும் கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகள் ஸ்கேனிங் செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றன.

கோவை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe