கோவையின் திருவண்ணாமலையில் இரண்டாவது நாள் மகாதீபம்.. புகைப்படங்கள்

published 2 years ago

கோவையின் திருவண்ணாமலையில் இரண்டாவது நாள் மகாதீபம்.. புகைப்படங்கள்

கோவை: கோவையின் திருவண்ணாமலை என்று அழைக்கப்படும் தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் இரண்டாவது நாள் மகாதீபம் ஏற்றப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வழிபாடு நடத்தினர்.

கோவை பாலக்காடு ரோடு குனியமுத்தூர் அடுத்த மதுக்கரையில் பழமை வாய்ந்த தர்ம லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில்  நேற்று மாலை 6 மணி அளவில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்த நிகழ்வில் 5000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து இன்றும் நாளையும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. இன்று காலை காலை 4.30 மணி அளவில் தர்மலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை  நடைபெற்றது. தொடர்ந்து மாலை 6 மணியளவில் கோவிலில் இரண்டாம் நாள் மகா தீபம் ஏற்றப்பட்டது. தர்மலிங்கேவரர் கோவில் தர்மகர்தா குழுவினர் இந்த மகா தீபத்தை ஏற்றினர்.

இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு மகா தீபத்தை வழிபட்டனர். இதனை தொடர்ந்து நாளை மாலை 4.30 மணிக்கு தர்மலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற உள்ளது. மாலை 6 மணிக்கு மூன்றாம் நாள் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்த மகா தீபம் 5 அடி கொப்பரையில் 150 லிட்டர் கொள்ளளவில் அமைக்கப்பட்டுள்ளது. இன்று காலை முதலே கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோவைப்புதூர் நடைபயிற்சி நண்பர்கள் சார்பில் அன்னதனம் வழங்கப்பட்டது. காலை முதல் மாலை வரை ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe