கோவையில் இன்று மின் தடை ஏற்படு பகுதிகள் அறிவிப்பு

published 2 years ago

கோவையில் இன்று மின் தடை ஏற்படு பகுதிகள் அறிவிப்பு

 

கோவை: கோவையில் இன்று மின் தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது. மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும் இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால், பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, கீழ்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை செய்யப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒன்னிப்பாளையம், சிங்காரம் பாளையம், சென்னி வீரம்பாளையம், கள்ளிப்பாளையம், காட்டம்பட்டி, குப்பேபாளையம், செங்காளி பாளையம், புகழூர் (ஒரு பகுதி) வடவள்ளி,

குரும்பபாளையம், கரிச்சி பாளையம், கதவு கரை, புத்தூர், வடுகபாளையம், மொண்டி காலிபுதூர், ரங்கப்ப கவுண்டன் புதூர் மற்றும் முணுகட்டியூர்.

பட்டினம் புதூர், பீடம் பள்ளி, (ஒரு பகுதி) சத்திய நாராயணபுரம், காவிரி நகர் ஸ்டேன்ஸ்காலனி, நெசவாளர் காலனி, வெள்ளலூர் ஒரு பகுதி, பட்டினம் மற்றும் நாயக்கன்பாளையம் ஆகிய இடங்களில் இன்று மின் வினியோகம் இருக்காது

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe