கோவையில் பிப்.13ல் மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

published 2 years ago

கோவையில் பிப்.13ல் மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

 

கோவை: கோவை மாவட்டத்தில் வரும் பிப்ரவரி  13ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.

கோவையில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக பல்வேறு இடங்களில் மின்விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நாளில் மின் கம்பங்களில் உள்ள பழுதுகள் இணைக்கப்பட்டு மின்சாரம் தங்கு தடை இன்று கிடைக்க மின்வாரியம் வழிவகை செய்து வருகிறது.

அந்த வகையில் வரும் 13ம் தேதி மின் பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை ஏற்படும் இடங்களை மின்வாரியம் அறிவித்துள்ளது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட, லட்சுமி நகர், இம்மிடிபாளையம், ரயில்வே ஸ்டேஷன் ரோடு ஒருபகுதி.

கோவில்பாளையம் ஒருபகுதி, சூலக்கல், தேவராயபுரம், சென்னியூர், ஆதியூர், ஜமீன் காளியாபுரம், களத்துார், கானல்புதுார், பெரும்பதி ஆகிய பகுதிகளில், வரும் 13ம் தேதி காலை 10 முதல், மதியம் 1 மணி வரை, மின்தடை என, துணை மின்நிலைய செயற்பொறியாளர் லட்சுமி தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe