கோவையில் மேற்குவங்க வாலிபர் கொலையில் தொடர்புடைய தந்தை மகனைப் பிடிக்க போலீசார் மும்பையில் தேடுதல் வேட்டை

published 2 years ago

கோவையில் மேற்குவங்க வாலிபர் கொலையில் தொடர்புடைய தந்தை மகனைப் பிடிக்க போலீசார் மும்பையில் தேடுதல் வேட்டை

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்:  https://chat.whatsapp.com/GKcHrWOaZYqGX1TFQywYIz
கோவை: மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் முஜாப்பூர் மாலிக் ( வயது 24). இவர் கோவை பூமார்க்கெட் தெப்பக்குளம் வீதி பகுதியில் ஒரு  வீட்டில் 3-வது மாடியில் வசித்து வந்தார். இவருடன் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மான்வா என்கிற ஆனந்தகுமார் (27) என்பவரும் வசித்து வந்தார்.‌ 

2 பேரும் துணிகளுக்கு எம்பிராய்டரி போடும் தொழில் செய்து வந்தனர். இவர்கள் இருவரும் கோவையில் வசித்து வந்த நஜிபுல் சேட் (45) என்பவரிடம் வேலை செய்து வந்தனர். கடந்து 11 மாதமாக நசிபுல் சேட் ,  முஜாபூர் மாலிக்கிற்கு சம்பளம் கொடுக்கவில்லை எனத் தெரிகிறது.

இதுதொடர்பாக இவர்களுக்கு அடிக்கடி வாக்கு வாதம் ஏற்பட்டு வந்தது.‌ கடந்த மாதம் நசிபுல் சேட், அவரது மகன் அனிஷேக் (19) ஆகியோர் முஜாபூர் மாலிக் தங்கியிருந்த மாடிக்குச் சென்றனர். 

அங்கே அவரிடம் தகராறு செய்தனர். சம்பளம் நாங்கள் தரும்போது வாங்கிக் கொள்ளவும்.  ஏதாவது பிரச்சினை செய்தால் நடப்பதே வேறு என மிரட்டியுள்ளனர். ஆனால் முஜாபூர் மாலிக் சம்பளம் கொடுத்தே தீர வேண்டும், நான் ரம்ஜான் பண்டிகையைக் கொண்டாடச் சொந்த ஊருக்குச் செல்கிறேன் என வாக்குவாதம் செய்துள்ளார். 

இதில் கோபம் அடைந்த அவர்கள் இருவரும் முஜாபூர் மாலிக் கை சரமாரியாகத் தாக்கினர். தலையை சுவற்றில் மோதி அடித்தனர். பின்னர் அவரின் தலையை பக்கெட் தண்ணீரில் அழுத்தி மூச்சு திணறடித்து கொலை செய்தனர். 

அப்போது அந்த அறையில் ஆனந்தகுமார் இருந்துள்ளார்.‌ தடுக்க வந்த அவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். இதில் பயந்துபோன ஆனந்தகுமார் எதுவும் செய்யவில்லை. கொலை சம்பவம் நடந்த பின்னர் பயத்தில் ஆனந்தகுமார் மேற்குவங்கம் சென்றுவிட்டார்.

சில நாட்களுக்குப் பின்னர் அழுகிய நிலையில் முஜாபூர் மாலிக்கின் உடல் கைப்பற்றப்பட்டது.  இதுகுறித்து ஆர். எஸ் புரம் போலீசார் மர்மச்சாவு என வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

சமீபத்தில் கோவை திரும்பிய ஆனந்தகுமார் நடந்த விவரங்களை ஆர். எஸ் புரம் போலீசில் தெரிவித்தார்.‌ போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.‌ தப்பிய குற்றவாளிகள் தந்தை மகன் இருவரும் மும்பையில் பதுங்கி இருப்பதாகத் தகவல் வெளியானது. 

அவர்களைப் பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் மும்பையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe