யூடியூபர் டி.டி.எப் வாசன் மீது காரமடை காவல் துறையினர் வழக்குப் பதிவு

published 1 year ago

யூடியூபர் டி.டி.எப் வாசன் மீது காரமடை காவல் துறையினர் வழக்குப் பதிவு

கோவை: கோவை மாவட்டம்  காரமடை அருகே உள்ள முத்துக்கல்லூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் டி.டி.எப்வாசன். இவர் பைக் ரைடு செய்து  சாகசத்தில் ஈடுபட்டு வருவதுடன் அதனை வீடியோவாக பதிவு செய்து டி.டி.எப்என்ற  தனது யூடியூப் சேனலில் பதிவிட்டு வருகிறார்.

இவருக்கு லட்சக்கணக்கில் பாலோவர்ஸ் மற்றும் ஆண்கள் பெண்கள் என ஒரு  ரசிகர்கள்பட்டாளமே  உள்ளது. தினமும் புதுப்புது வீடியோக்களை யூடியூபில் பதிவேற்றம் செய்து வரும் டி.டி.எப்வாசன் அவ்வப்போது  காவல் துறையினருக்குத் தலைவலியை ஏற்படுத்தும் சில பதிவுகளையும் பதிவிட்டு வழக்குகளையும் சந்தித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது  அய்யப்பான் ராமசாமி மீது  தாக்குதல் நடத்துவேன் எனக் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் வாசன்.

ஏற்கனவே டி.டி.எப்வாசனுக்கும் தற்போது சர்ச்சையில் சிக்கிய அய்யப்பன் ராமசாமிக்கும் சில கருத்து மோதல்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த  நிலையில் அய்யப்பன் ராமசாமி தான் பேசுவதற்கு பணம் பொருட்கள் வாங்கியதாக வீடியோ வெளியான நிலையில் அது குறித்து டி.டி.எப்வாசன் ஒரு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார்.

அதில் பெண்கள் குறித்து இழிவாக பேசியதாகக் கூறி அய்யப்பன் ராமசாமியை கடுமையாக விமர்சித்த வாசன் நீ மட்டும் என்கையில்சிக்கினால் உன் மூஞ்சியை உடைப்பேன், உன்னை எங்கு பார்த்தாலும் விட மாட்டேன் என அந்தப் வீடியோபதிவில் கூறியுள்ளார். 

இதனையடுத்து தற்போது காரமடை போலீசார் டி.டி.எப்வாசன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். தகாத வார்த்தைகளை பயன்படுத்தி வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe