கோவையில் குடிபோதையில் போலீஸ் கான்ஸ்டபிளை கீழே தள்ளி தாக்கிய வாலிபர்கள்:

published 1 year ago

கோவையில் குடிபோதையில் போலீஸ் கான்ஸ்டபிளை கீழே தள்ளி தாக்கிய வாலிபர்கள்:

கோவை: கோவை ரத்தினபுரி போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். சங்கனூரில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை அருகே சென்றபோது சில வாலிபர்கள் அங்கு குடிபோதையில் தகராறு செய்து கொண்டிருந்தனர்.

போலீசார் அவர்களை எச்சரித்து அங்கிருந்து செல்லுமாறு கூறிவிட்டுப் புறப்பட்டு சென்றனர். பின்னர் சிறிது கழித்து போலீசார் அதே பகுதிக்கு ரோந்து வந்தனர். 

அப்போது முன்பு நின்றிருந்த அதே வாலிபர்கள் மீண்டும் குடிபோதையில் தகராறு செய்து கொண்டிருந்தனர். 

இதனை போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கண்டித்தார். இதில் ஆத்திரமடைந்த குடிபோதை ஆசாமிகள் 2 பேர் தகாத வார்த்தைகளால் பேசி அவரை கீழே தள்ளி தாக்கினர். 

இந்த சம்பவம் தொடர்பாக ரத்தினபுரி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், மிரட்டல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். 

அதில், குடிபோதையில் போலீசாரை தாக்கியது சிவானந்தாகாலணியைச் சேர்ந்த பெயிண்டர் மணி(27), மற்றும் அவரது தம்பி விஷ்ணு(23), ஆகியோர் என்பது தெரியவந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe